×

பொதுமக்களின் தாகத்தை தீர்க்க பாஜவினர் நீர் மோர் பந்தல் அமைக்க அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பத்தைத் தணிக்க பல பகுதிகளில் நம் பாஜவினர் நீர்மோர்ப்பந்தல் அமைத்து, மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். சென்னையில் நம் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் இன்னும் பல மாவட்ட அலுவலகங்களிலும், தினமும் நீர் மோர் வழங்கப்படுகிறது.

கொடிய நோய்த் தொற்றான கொரோனா காலத்தில் நாம் செய்த மக்கள் சேவையைப் போல, இந்தக் கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் இந்த நற்பணியை தமிழகம் முழுவதும், கட்சி உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன். அனைவரும், தங்கள் பகுதியிலே சாலை ஓரங்களில் நிழற்குடைகள் அமைத்தும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், நீர் மோர் வழங்கியும், தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க உறுதி ஏற்போம்.

சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்கும், இந்த சமூகப் பணியை, ஒவ்வொரு பூத்திலும், மண்டலிலும், சக்தி கேந்திரத்திலும், மாவட்ட அளவிலும், மற்றும் மாநில அளவிலும் உள்ள அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

The post பொதுமக்களின் தாகத்தை தீர்க்க பாஜவினர் நீர் மோர் பந்தல் அமைக்க அண்ணாமலை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Chennai ,Tamil Nadu ,president ,Neer ,
× RELATED பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு...